கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர்கள் குடியிருக்கும் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதற்காக நேற்று (மார்.19) தம்பதியினர் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஸ்லாப் மீது நின்றிருந்த தமிழ்ச்செல்வி தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு.