
குமரி மாவட்டம் சாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் விஜயேந்திர சிங்கன். மெக்கானிக்கான இவர் தனது புல்லட் பைக்கை கடந்த ஒரு வாரம் முன்பு அங்கு நிறுத்திவிட்டு மெக்கானிக் பணிகளை மேற்கொண்டார். பின்னர் வந்து பார்த்தபோது புல்லட் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் பைக் திருடனை தேடி வந்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் திருடனை தேடி வந்தனர். இந்த நிலையில் கேரள மாநிலம் ஒற்றாமரம் பகுதியில் அதே புல்லட் பைக்கில் ஒரு ஆசாமி சுற்றி திரிவது தெரிய வந்தது. போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் புல்லட் வாகனத்தை மட்டுமே குறிவைத்து திருடிய செல்சன் (20) என்பது தெரிய வந்தது. கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த செல்சன் மீது கேரளா காவல் நிலையங்களில் 15 மேற்பட்ட புல்லட் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. திருடிய புல்லட்டுகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.