உலக தண்ணீர் தின விழா: மரக்கன்றுகளை நடும் விழா.

மதுரை அருகே யானைமலை அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது;

Update: 2025-03-23 05:36 GMT
  • whatsapp icon
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா யானைமலை கிரீன் பவுண்டேசன் 207வது வார விழா ஒத்தக்கடை அம்மா பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். தண்ணீரின் பயன்கள், தண்ணீர் சிக்கனம், தண்ணீர் பற்றிய பொன்மொழிகள், ஆறு, குளம் தூய்மை, தட்பவெப்ப நிலை ஆகியன குறித்து தலைமை ஆசிரியர் தென்னவன் பேசினார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கைகளினால் புங்கை மரம் நடப்பட்டது. நிகழ்வுக்கு தேவையான மரங்கள் மற்றும் வலைககளை உறுப்பினர் பாலமுருகன் வழங்கினார். நிகழ்வில் மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனர் உமேஷ், யானைமலை கிரீன் பவுண்டேசன் ஆலோசகர்கள் பாலமுருகன், உறுப்பினர்கள் பரமேஸ்வரன், பாஸ்கரன், ரமேஷ், ஸ்டெல்லா மேரி, பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கைகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டன‌. நீர் ஊற்றப்பட்டது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவி நிலானா நன்றி கூறினார்.

Similar News