ராணிப்பேட்டையில் நடந்து சென்றவர் மீது வாகனம் மோதி பலி
நடந்து சென்றவர் மீது வாகனம் மோதி பலி;

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் நேற்று சென்னை பெங்களூர் புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என விசாரித்து வருகின்றனர்