தேனி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) ஆண்டிப்பட்டிக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது புள்ளிமான் கோம்பை சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த கார்த்திக் (27) என்பவரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அவர் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்