வீரபாண்டியை சேர்ந்தவர் மகேஷ். இவர் நேற்று (மார்.22) தனது தாய் அமுதாவுடன் தேனி சென்று விட்டு தனது பைக்கில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். போடேந்திரபுரம் விளக்கு அருகே வந்த போது முத்துக்கிருஷ்ணன் ஓட்டிவந்த ஆட்டோ இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற தாய், மகன் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.