அத்திப்பட்டு:பழுதடைந்த அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றம்
பழுதடைந்த அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றம்;

அத்திப்பட்டு கிராமத்தில் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் பழுதடைந்து இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவின் பேரில் இன்று பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் இடித்து, அதன் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.