கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கொரடாச்சேரி ஒன்றியத்தில் செல்லூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர்.;
திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் கிராமத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 4000 கோடியை தமிழ்நாட்டுக்கு தர மறுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் பகுதியில் திமுக கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.