
போடியை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் மாவிவசாயம் செய்து வரும் நிலையில் விவசாய அபிவிருத்திக்காக கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்ட நிலையில் அதனை செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்த கணேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.31) வழக்கு பதிவு செய்து விசாரணை.