
கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரங்களில் காய்ந்த இலை சருகுகள், குப்பை உள்ளிட்டவைகளை கொட்டி சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகை நெடுஞ்சாலையில் பரவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பகலில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் தீ வைப்பதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகமாக உள்ளது. தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.