கையில் வாளுடன் சுற்றித்திரிந்தவர் மீது வழக்கு பதிவு
தேவகோட்டை அருகே கையில் வாளுடன் சுற்றித்திரிந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு அருகில் உள்ள பனங்காத்தான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 35). இவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளைக் கையில் வைக்து கொண்டு சுற்றித்திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆறாவயல் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றார்