லஞ்சம் : கிராம அலுவலர், உதவியாளர் கைது

தலக்குளம்;

Update: 2025-04-02 09:31 GMT
குமரி மாவட்டம் தலக்குளம் கிராம அலுவலகத்தில் அலுவலராக அமல ராணி, கிராம உதவியாளர் பேபி என்பவரும் பணி புரிகின்றனர். நெய்யூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (56) என்பவர் ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்று வேண்டி தனது 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்து உள்ளார்.      சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்து அதன் பின்னர் ஆர் ஐ பரிந்துரை செய்த பின்னர் தாசில்தார் அலுவலகம் மூலமாக சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.      அவ்வாறு சொத்து மதிப்பு சான்று பெற  சொத்து ஆவணத்தை காண்பித்து விண்ணப்பித்தபோது  அதற்கு 3000 ரூபாய் தந்தால் முப்பது ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு சான்று பெற பரிந்துரை செய்ய முடியும் என்று கறாராக கூறியுள்ளார்.       லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். புகாரின் படி வழக்குப்பதிவு செய்த குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று 02-04-2025 காலை சுமார் 11:30 மணி அளவில் பதுங்கி இருந்தனர். அப்போது ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரரான ஆறுமுகம் கொடுக்கும்போது அருகில் இருந்த கிராம உதவியாளர் பேபி இடம் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் கூறவே அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் வேண்டுகோள் படி கிராம  உதவியாளர் பேபி வாங்கும்போது மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன் துரை லஞ்ச ஒழிப்பு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உதவி உடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்.

Similar News