போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் நேற்று முன் தினம் இரவு போடி பேருந்து நிலையத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.2) கருப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்