தேனி மாவட்டம் தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலா (30). இவருக்கும் இவரது கணவர் ராஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜாவின் சகோதரி சூரம்மாள் அவரது கணவர் முருகன் ஆகியோர் ஜெயபாலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்த புகாரியில் இருவர் மீதும் நேற்று (ஏப்.2) பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.