ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (70). இவருக்கு கடந்த சில வருடங்களாக மனநிலை குன்றி அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.2) அவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றிய ஆண்டிபட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.