சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. கன்னிசேர்வைப்பட்டியில் உள்ள இவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் மதிப்பிலான சொட்டுநீர் பாசன குழாய்கள் கடந்த 31ஆம் தேதி திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் சின்னமனூர் போலீசார் நேற்று (ஏப்.02) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.