நீர் மோர் பந்தல் திறப்பு விழா!

வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் வெளியில் நீர் - மோர் பந்தல் திறக்கப்பட்டது.;

Update: 2025-04-03 14:28 GMT
வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவலகம் வெளியில் நீர் - மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் குளிப்பானங்கள் வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News