
தக்கலை அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (52). கொத்தனார். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை ஜெயக்குமார் அந்த பகுதியில் உள்ள வேளச்சேரி குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் ஜெயக்குமாரை மீட்டு சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுனிதா தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.