இளைஞரணி சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா, கருத்தரங்கம்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இதில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சிற்பி.செல்வராஜ் கொள்கையின் தொடர்ச்சி எனும் தலைப்பிலும், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி நவீனத்துவத்தின் மலர்ச்சி;
பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா, கருத்தரங்கம் நடைபெற்றது! சுப.வீரபாண்டியன் - மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பில், பெரம்பலூர்,எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சகுந்தலா சுப்பிரமணியம் தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம் வரவேற்புரையில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கருத்தரங்கில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இதில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சிற்பி.செல்வராஜ் கொள்கையின் தொடர்ச்சி எனும் தலைப்பிலும், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி நவீனத்துவத்தின் மலர்ச்சி எனும் தலைப்பிலும், தி.மு.க.தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் எஸ்.பத்மபிரியா திட்டங்களின் வளர்ச்சி எனும் தலைப்பிலும் பேசினார்கள். மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.அருண் நன்றியுரையாற்றினார்.