மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்!
கே.வி.குப்பம் அருகே மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கவசம்பட்டு பகுதியில் கே.வி.குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். இதனையடுத்து பாலாற்றில் இருந்து மணல் கடத்தியது தெரியவந்தது.மணலுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.