கோவை: பக்தி முழக்கத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர தேரோட்டம் !

பேரூர் ஆதீனம் மருவாசல அடிகளார் தேரின் வடத்தைப் பிடித்துக் கொடுக்க, திரளாகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரூரா பட்டீசா என்ற பக்தி முழக்கங்களை விண்ணதிர எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2025-04-09 06:12 GMT
  • whatsapp icon
கோவையில் புகழ்பெற்ற முக்தி ஸ்தலமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்கள் எழுப்பிய பக்தி முழக்கங்களுக்கு இடையே வெகு விமரிசையாகத் தொடங்கியது. நேற்று இரவு பட்டீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியாக எழுந்தருளினர். பேரூர் ஆதீனம் மருவாசல அடிகளார் தேரின் வடத்தைப் பிடித்துக் கொடுக்க, திரளாகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரூரா பட்டீசா என்ற பக்தி முழக்கங்களை விண்ணதிர எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்திற்கு முன்னதாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பட்டக்காரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்தத் தேரோட்டமானது சிறுவாணி சாலை மற்றும் கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தேர் நிலைத்திடலை வந்தடையும்.தேரோட்டத்தை முன்னிட்டு, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தி சிரத்தையுடனும் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

Similar News