நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா!
நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது;

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் தலைமை காவலர் வேல்பாண்டியன், நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் மற்றும் விவசாய பெருமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மணிராஜ், மானாட்டூர் ராமன், லெட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.