முதலமைச்சர் திறந்து வைத்த குருவாலப்பர் கோவிலில் நூலக கட்டிடத்தை எம் எல் ஏ துவக்கி வைத்தார்
முதலமைச்சர் திறந்து வைத்த குருவாலப்பர் கோவிலில் நூலக கட்டிடத்தை எம் எல் ஏ துவக்கி வைத்தார்;
அரியலூர், ஏப்.11- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவிலில், ஊரக நூலக அமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை, சென்னையில் இருந்து முதலமைச்சர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் சம்பத்,வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன்,பொருளாளர் முல்லைநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.