நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற இடத்தில்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு;

Update: 2025-04-12 09:47 GMT
சேலம் எஸ்.கொல்லப்பட்டி வட்டமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 42). இவருடைய நண்பர் பி.நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி. கோவில் விழாவுக்கு கோவிந்தசாமி அழைத்ததால் கந்தசாமி பி.நல்லாகவுண்டம்பட்டிக்கு சென்றுள்ளார். அங்குள்ள தென்னை மரத்தில் கந்தசாமி ஏறி உள்ளார். அப்போது தவறி விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் எஸ்.கொல்லப்பட்டி சென்றுள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News