அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.;

வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக இன்று வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.