திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை காஜாப்பேட்டை அருகே கஞ்சா விற்றதாக கீழப்புதூர் குருவிக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன் (25 )என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.