மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.;
அரியலூர், ஏப்.18: அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர், இம்மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கணகாணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.