கொடுவிலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமானந்தம். இவரிடம் நேற்று முன் தினம் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஜெயமணி ஆகியோர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த பரமானந்தத்தின் மனைவி, அவரது மைத்துனரையும் அவர்கள் இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வேல்முருகன், ஜெயமணி மீது நேற்று (ஏப்.17) வழக்கு பதிவு செய்துள்ளனர்.