போடியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-18 14:01 GMT
போடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (80). இவர் கடந்த 12-ம் தேதி அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போடி போலீசார் நேற்று (ஏப்.17) வழக்கு பதிவு.

Similar News