சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பினார். மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகர் பகுதியில் மொபட்டை நிறுத்திவிட்டு அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.