மத்தூர் அருகே வேளாண்மை கல்லூரி மாணவர்கள் களப்பணி
மத்தூர் அருகே வேளாண்மை கல்லூரி மாணவர்கள் களப்பணி;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தில் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின்(RAWE) கீழ் களப்பணி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ஸ்ரீதரன் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினர்.