தென்கரை பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடப்பதாக நேற்று (ஏப்.20) தென்கரை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தென்கரை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.