கண்டமனூர் காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஏப்.20) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது புதுராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி (75) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது கடையில் 6.750 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.