உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவரது கடை முன்பாக நேற்று முன்தினம் இரவு சத்தியசீலன் என்பவர் மது அருந்தி உள்ளார். ராஜாமுகமது அதனை தட்டி கேட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த சத்தியசீலன் கடையில் இருந்த திருப்புளியை எடுத்து ராஜாமுகமதுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் நேற்று (ஏப்.20) வழக்கு பதிவு செய்து விசாரணை.