கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று(ஏப்.20) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே சசிகுமார்(36) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.