கிருஷ்ணகிரி தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை.
கிருஷ்ணகிரி தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை.;
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், 'கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமை வகித்துப் பேசினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றை மீட்டெடுத்து, அவற்றை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் வருவாய் துறையினருக்கு வரலாறு குறித்த பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.