சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் பனியன் கம்பெனியில் தொழில் செய்து வந்த விஜய்க்கு தொழில் குறைவாக இருந்துள்ளது. இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய், விரக்தியில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.