ராணிப்பேட்டை அருகே மயங்கி விழுந்து ஒருவர் பலி!

மயங்கி விழுந்து ஒருவர் பலி!;

Update: 2025-04-23 04:40 GMT
ராணிப்பேட்டை சிப்காட் நேதாஜி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 37). வாடகைக்கு வீடு எடுத்து தங்கி டிஜிட்டல் சர்வீஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News