ஆற்காட்டில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை;
ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 67). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை ஏகாம்பரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.