விவசாயிகள் சாலை மறியல்

மதுரை உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-23 11:28 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள சாலையை சீரமைக்கவும், முறையான சாக்கடை வசதி அமைத்து தர கோரி பலமுறை இரு அரசு அலுவலகத்திலும் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாயிகள் சங்க விவசாயிகள் ஒன்றிணைந்து உசிலம்பட்டி பேரையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் இன்று (ஏப்.23) ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் செக்காணூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திலகராணி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து அரசு மண்டபத்தில் வைத்துள்ளனர். விவசாயிகளின் இந்த சாலை மறியல் போராட்டதால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News