காவேரிப்பட்டணம் அருகே டூவீலரில் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு.
காவேரிப்பட்டணம் அருகே டூவீலரில் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள போத்தாபுரத்தை சேர்ந்தவர் கோபி (17) இவரும் அதேபகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (17) என்பவரும் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம் பாரத கோவில் அருகே சென்ற பொது டூவீலரில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் கோபி, மோகன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கோபி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.