அரியலூரில் ஜாக்டோ } ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் ஜாக்டோ } ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர், ஏப்.23 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ }ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், 1.4.2003}க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நிர்வாகிகள் பெரியசாமி,செல்வகுமார், கருணாநிதி,அம்பேத்கர், காந்தி, சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.