பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா
இரூர் கிராமத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியினை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.;
ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இரூர் கிராமத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியினை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளியேறி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.