வடலூர்: போப் ஆண்டவரின் படத்திற்கு மரியாதை
வடலூரில் போப் ஆண்டவரின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் இருதய ஆண்டவர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவரின் உருவப் படத்திற்கு குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளரும், நகர மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.