சட்ட விரோத கனிம வள சுரண்டலை தடுக்க எம்.பி கோரிக்கை.

மதுரை அருகே கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்க மதுரை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2025-05-20 06:14 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள மலை பகுதிகளில் இரவு நேரத்தில் கனிம வளங்களை சட்ட விரோதமாக எடுத்து செல்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியான நிலையில் இன்று மதுரை எம்.பி இதுகுறித்து அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். ஊடகங்கள் இது குறித்து செய்திகள் வெளியிட்ட பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு நடைபெற்றுள்ள சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News