பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி
மரக்கன்று வழங்கிய துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் பேருந்து நிறுத்தத்தில் நெல்லை மக்கள் நல நண்பர்கள் குழு சார்பில் இன்று (மே 21) பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கொண்டாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.