திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை 8:00 மணிக்கு வெள்ளை விநாயகர் கோவில் சந்து பகுதியில், அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க, முதியவர் சடலம் கரை ஒதுங்கியது. அங்கு விரைந்து சென்ற திருக்கோவிலுார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.