நாகையில் மின்சாரம் தாக்கி

மின் ஊழியர் இறந்தார்;

Update: 2025-05-23 04:11 GMT
நாகையை அடுத்த சிக்கலை சேர்ந்தவர் அற்புதராஜா (47). நாகை வெளிப்பாளையம் மின்சார அலுவலகத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று நம்பியார் நகரில் மின் பழுது காரணமாக மின்மாற்றியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர், அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து, வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News