திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் மணிமுத்தாறு அருவியில் கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.