கூடலூர் அருகே பாலத்தில் வளரும் ஆலமரம் வெட்டி அகற்ற வலியுறுத்தல்
வலியுறுத்தல்;
கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு, பளியன்குடி, ஊமையன் தொழு, சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட காஞ்சிமரத்துறை பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். இந்த பாலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகின்றது. மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் ஆலமரம் வளர்ந்துள்ளது. மரத்தை வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.